New Videos from Youtube

சிறுவன் கையை கடித்து தின்ற கரடி...

மிருகக்காட்சி சாலையிலிருந்த கரடியொன்றுக்கு அதனது கூண்டினூடாக உணவளிக்க முயற்சித்த 9 வயது சிறுவன் ஒருவனது கரத்தை கரடி கடித்துத் துண்டித்து உண்ட விபரீத சம்பவம் மத்திய சீனாவில் இடம்பெற்றுள்ளது.

ஹெனான் மாகாணத்திலுள்ள பிங்டிங்ஷான் ஹெபிள் வனப்பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரடியால் கை கடியுண்ட சிறுவன் உடனடியாக பிங்டிஷ்ஷானிலுள்ள 152ஆம் இலக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். இந்நிலையில் மருத்துவர்கள் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற சிறுவனது கடித்து துண்டாக்கப்பட்ட வலது கரத்தின் எஞ்சிய பகுதியை வெட்டி அகற்றியுள்ளனர்.

ஹன்சிகா, நயன்தாரா மாதிரியெல்லாம் எனக்கு மனைவி எதுக்கு..? சிம்பு..!

தமிழ் சினிமாவின் மன்மதன் சிம்பு நடிகை நயன்தாரா, ஹன்சிகாவை காதலித்தார் என்பதும் பிறகு அந்த காதல் என்னானது என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டயளித்த சிம்புவிடம் உங்களுக்கு வரப்போற மனைவி ஹன்சிகா மாதிரி இருக்கணுமா, நயன்தாரா மாதிரி இருக்கணுமா? என்ற கேட்டதற்கு, ‘‘என் மனைவி மாதிரி இருக்கணும். ஹன்சிகா, நயன்தாரா மாதிரியெல்லாம் எனக்கு மனைவி எதுக்கு?’’ என பதிலளித்தார்.

அவர் அளித்த பேட்டி பின்வருமாறு...

கேள்வி - உங்களோட படங்கள் வருதோ இல்லயோ, ஆனா சர்ச்சைகள் மட்டும் வந்துகிட்டே இருக்கே. உதாரணமா அந்த வீடியோ..?

பதில் - வேறு யாருக்காவது இந்த மாதிரி வந்திருந்தால் அவர் க்ளோஸ். ஆனா, நமக்கு வீடியோ வந்தா அது மாஸ். நான் எதற்கு பீல் பண்ணிட்டு இருக்கணும்? நான் எதுவுமே பண்ணவில்லை என்றாலும், வாராவாரம் என்னைப் பற்றி எழுதிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

வாராவாரம் எழுதிட்டு, அதுக்குப் பதில் சொல்லுங்க, இதுக்குப் பதில் சொல்லுங்க என்று சொன்னால், நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க? திடீரென்று பாம் வெடிச்சா பதற்றம் இருக்கும். தினமும் பாம் வெடித்துக்கொண்டேதான் இருக்கிறது. அப்புறம் எதுக்குப் பயப்படணும்.

வீடியோ வந்த அன்றைக்கு, என்னிடம் பதற்றமாகக் கேட்டர்கள். “அப்படியா.. வீடியோவில் நான் என்ன பண்றேன்” என்று கேட்டேன். நீங்க ஒரு பொண்ணை கிஸ் பண்றீங்க என்றார்கள். யாரையாவது கத்தி எடுத்துக் குத்திட்டேனா… கிஸ்தானே பண்ணினேன்.

எல்லாரும் பண்ணினதுதானே. அடுத்த தடவை நல்ல லைட் எஃபெக்ட் எல்லாம் பண்ணி வீடியோ எடுத்துப் போடலாம் என்று இருக்கிறேன். ஆனா அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை.

கேள்வி - ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ படங்கள் எப்போ வெளிவரும்?

பதில் - ‘வாலு’ படத்தில் ஒரு பாட்டு மட்டும் பாக்கி இருக்கு. நீங்க எப்போ கூப்பிட்டாலும் நடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லிட்டேன். தேதி முடிவு பண்ணிட்டுச் சொல்றேன் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர். ‘இது நம்ம ஆளு’ முக்கியக் காட்சிகள் எல்லாம் எடுத்து முடிச்சாச்சு. இன்னும் மூணு பாட்டு மட்டும் பாக்கி. ஒரு மாதத்தில் இசை தயாராகிவிடும்.

கேள்வி - நயன்தாராவுடன் காதல் பிரிவுக்குப் பிறகு நடிக்கிறீங்க. இப்போ பார்ட்டி போற அளவுக்கு நெருக்கமாகிவிட்டீர்களே..?

பதில் - முதல் விஷயம், நாங்க இரண்டு பேருமே சண்டை எல்லாம் போட்டுக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் ஒத்துப்போகவில்லை, பிரிந்துவிட்டோம். அவ்வளவுதான். எங்கள் இருவரது மனதிலும், இப்போது எதுவுமே இல்லை.

அவங்க வேலையை அவங்க பாக்குறாங்க, என் வேலையை நான் பாக்குறேன். அதனால்தான் எங்களால் இணைந்து நடிக்க முடியுது. நான், தனுஷ், நயன்தாரா, அனிருத் எல்லாருமே நட்பா இருக்கோம். அன்றைக்கு எல்லாருமே ப்ரீயா இருந்தோம். வெளியே போனோம். அவ்வளவுதான்.

கேள்வி - தங்கச்சி கல்யாணம் முடிந்தவுடன் எனது கல்யாண அறிவிப்பு இருக்கும் என்றீர்கள்?

பதில் - அப்போ ஒரு பெண்ணைக் காதலித்தேன். இப்போதான் இல்லையே. வீட்டில சொன்னா உடனே கல்யாணம் வைப்பாங்க. யாரை வேண்டுமானாலும் பண்ணுவது கல்யாணம் இல்லயே. என்னைப் புரிஞ்சுக்கிட்டு வர்ற ஒரு பெண் வர்ற வரைக்கும் எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா கிடையாது.

கேள்வி - இயக்குநர் சிம்பு என்ன ஆனார்?

பதில் - அடுத்த வருஷம் ஒரு படம் இயக்க இருக்கிறேன். வரும் நாட்களில் நான் எந்த மாதிரி இருப்பேன், படங்கள் பண்ணுவேனா என்பதெல்லாம் சந்தேகமே. சினிமா ஈடுபாடு வரும் காலங்களில் எப்படியிருக்கும் என்பது தெரியாததால், அடுத்த வருஷம் நானே இயக்கி, நடிக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கேன்.

கேள்வி - ஆன்மிகப் பாதையில் இருந்துகொண்டே பார்ட்டிக்குப் போவது நியாயமா?

பதில் - ஆன்மிகத்தில் நிறைய வழிகள் இருக்கின்றன. நான் ஆன்மிகத்திற்குள் போனதுக்குப் பிறகுதான் நிறைய பார்ட்டிகளுக்குப் போக ஆரம்பித்தேன். முதல்ல நான் யாருக்காக வாழ்கிறேன்? நான் முதல்ல என்னைச் சந்தோஷமா வைச்சுக்கணும்.

நான் சந்தோஷமா இருந்தால்தான், என்னைச் சுற்றி இருக்கிறவங்க சந்தோஷமா இருக்க முடியும். ஆன்மிகத்திற்குள் போன பிறகுதான், நான் வெளியே போக ஆரம்பித்தேன்.

கேள்வி - காதலித்துத் தோல்வியடையாமல் இருக்க என்ன பண்ணணும்?

பதில் - காதல் அப்படின்னாலே இரண்டு பேர் கிடையாது. காதலிக்க ஆரம்பித்த உடனே நீங்க ஒருத்தர்தான் அப்படின்னு ரெண்டு பேருமே உணரணும். ஒருத்தருக்கு அது புரியல, புரிய வைக்க முடியலன்னாலும் அது வேலைக்கு ஆவாது. எல்லா விஷயத்தையும் நாம கட்டாயப்படுத்த முடியாது. ஒரு சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துதான் ஆகணும்.

கேள்வி - உங்களுடைய காதல் கதையை ஒரு படமாக எடுத்தால் என்ன?

பதில் - என்னோட காதல் கதையைப் படமா எடுத்தால், பலருக்கு நெஞ்சு வலிதான் வரும். நிறைய சர்ச்சைகள் இருக்கும், சோகங்கள் இருக்கும். என்னோட சோகம் எல்லாம் என்னோடயே இருக்கட்டுமே.

கேள்வி - ஹன்சிகா, நயன்தாரா திரும்பவும் உங்ககிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொன்னா ஏற்றுக்கொள்வீர்களா?

பதில் - யாரா வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு பொண்ணு வந்து, எனக்கு உன்னை மட்டும்தான் பிடிக்கும். உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா பண்ணிப்பேன். 100% எனக்குப் பிடிக்கணும். அதுதான் விஷயம்.

ஸ்ருதிஹாசனை வைத்து விளம்பரம் தேடிய பூஜை..!

ஹரி இயக்கத்தில், விஷால், ஸ்ருதிஹாசன் நடிப்பில் தீபாவளி ரிலீசாக நாளை வெளியாக உள்ள படம் ’பூஜை’. கத்திக்கு போட்டியாக இப்படம் களம் இறங்குகிறது. விஷால் நடித்த படங்களிலேயே அதிக தியேட்டர்களில் ரிலீஸாவது பூஜை படம்தான்.

கிட்டத்தட்ட 1108 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறதாம். இதில் தமிழகத்தில் 375 தியேட்டர்கள், ஆந்திராவில் 473 தியேட்டர்கள், கேரளாவில் 70 தியேட்டர்கள், எப்.எம்.எஸ் 143, கர்நாடகாவில் 47 தியேட்டர்களில் பூஜை ரிலீஸ் ஆக உள்ளது. ஆந்திராவில் தமிழகத்தைவிட அதிக தியேட்டர்களில் படம் ரிலீசாக உள்ளதுதான் இதில் விஷயமே.

பூஜையுடன் கத்தி படமும் களத்தில் குதிப்பதால், தமிழகத்தில் வசூல் குறைந்தாலும், ஆந்திரா பக்கம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதாம் படக்குழுவிற்கு. ஆந்திராவில் அதிக தியேட்டர்களில் பூஜை ரிலீசாக காரணம், அதன் ஹீரோயின் ஸ்ருதிஹாசன்தான்.

தமிழிலில் அம்மணி நடித்த படங்கள் கைகொடுக்காவிட்டாலும், ஆந்திராவில் ராசிக்கார பெண் அவர். ஒரு பாடலில் நடனமாடினாலும் படம் ஹிட் ஆகிவிடுகிறதாம். எனவே பூஜை படத்தை ஸ்ருதிஹாசன் நடித்த படம் என்றுதான் அங்கு விளம்பரம் செய்து வருகின்றனர்.

விஜயசாந்தி, ரோஜா போன்றே ஸ்ருதிஹாசனும் அங்கு ஹீரோயினை மையப்படுத்தும் படங்களுக்கான முகவரியாக மாறிப்போயுள்ளார். இதுதான் ஆந்திராவில் பூஜை களை கட்ட காரணம்.

தீபாவளி அன்று எந்தெந்த சேனலில் என்னென்ன படங்கள்..!

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, பலகாரம், புத்தாடைகளோடு புதுப்படமும் ரீலீஸ் ஆவது வாடிக்கை. இந்த ஆண்டு தியேட்டர்களில் மெகா ஹிட் படங்கள் மோதுவதை போல, தொலைக்காட்சிகளில் மெகா ஹிட் படங்கள் மோத இருக்கின்றன.

தீபாவளியன்று ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்களைப் பற்றி சேனல்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில திரைப்படங்களின் ஒளிபரப்பு நேரம் பற்றி இன்னும் அறிவிப்பு செய்யப்படாமலே உள்ளது. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

விஜய் டிவி:

மான் கராத்தே:

திருக்குமரன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ், வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்து வெளியான புத்தம் புதிய திரைப்படம் ’மான் கராத்தே’. இப்படம் தீபவளியன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

நான் சிகப்பு மனிதன்

திரு இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் விஷால், லட்சுமி மேனன், இனியா மற்றும் பலர் நடித்து வெளிவந்த புத்தம் புதிய திரைப்படம். நான் சிகப்பு மனிதன் மேட்னிக்கு ஒளிபரப்பாகிறது.

ராஜா ராணி ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சத்யன் மற்றும் பலர் நடித்துள்ள ராஜா ராணி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அட்லீ இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

ஜெயா டிவி:

கோச்சடையான்

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர் மற்றும் பலர் நடித்துள்ள கோச்சடையான் திரைப்படம் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் இந்தியாவில் உருவான முதல் மோஷன் கேப்சரிங் திரைப்படம். தீபாவளி தினத்தன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது.

சன் டிவி:

ஜில்லா:

விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி மற்றும் பலர் நடித்திருக்கும் ஜில்லா சன்டிவியில் ஒளிபரப்பாகிறது. ஆர்.டி.நேசன் இயக்கத்தில் டி.இமான் இசையைமப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தீபாவளி சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது.

அஞ்சான்:

சூர்யா, சமந்தா, வித்யுத் ஜமால் மற்றும் பலர் நடித்திருக்கும் அஞ்சான் தீபாவளி சிறப்புத் திரைப்படமாக சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் இதுவரை முன்னோட்டம் போடவில்லை

ஜீ தமிழ்:

யாமிருக்க பயமே:

கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரி, ஓவியா நடித்திருக்கும் யாமிருக்க பயமே திரைப்படம் ஜீ தமிழ் டிவியில் தீபாவளி தினத்தன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

மஞ்சப்பை:

விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடித்த மஞ்சப்பை மாலை 5 மணிக்கு ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

கலைஞர் டிவி

குருவி:

விஜய் த்ரிஷா நடித்த குருவி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சேனல்களைத் தவிர பாலிமர், புதுயுகம், வேந்தர், என இன்னும் பல சேனல்களில் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

இந்த திரைப்படங்களோடு கடந்த மாதம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஐ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஜெயா டிவியில் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டாரவளையில் விபத்து 45பேர் காயம்

பண்டாரவளை – உடமல்வத்த - ஐஸ்லப்பி பிரதேசத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 45 பேர்வரை காயமடைந்துள்ளனர்.

இவர்கள் முதலில் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

இதில் 11 பேர் பின்னர் தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்

அதிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட 3பேர் பதுளை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

அரச பேருந்து ஒன்றே பள்ளத்தில் வீழ்ந்து அனர்த்தத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டம்பிட்டியவிலிருந்து பண்டாரவளை நோக்கி இன்று 9.45 அளவில் பயணத்தை ஆரம்பித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா பயண எச்சரிக்கை

இலங்கைக்கு செல்லும் தமது நாட்டு பொதுமக்களுக்கு அவுஸ்திரேலியா பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது

எதிர்வுகூறமுடியாத பாதுகாப்பு சூழ்நிலை அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதியில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொண்டிருப்போர் வடக்குக்கு செல்லவேண்டுமாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதனையடுத்தே அவுஸ்திரேலியா தமது நாட்டு மக்களுக்கு பயண அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

பனிப் பொழிவில் இறந்த மேலும் 10 உடல்கள் மீட்பு

நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பனிப்புயல் மற்றும் பனிப் பொழிவுகளில் இறந்த மலேயேறிகளின் மேலும் 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களில் ஒன்பது பேர் நேபாளிகள் ஒருவர் இஸ்ரேலியர். இவர்களின் உடல்கள், வடமேற்கு நேபாளத்தின் முஸ்டாங் நகரிலிருந்து தலைநகர் காட்மாண்டுவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதில் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டு உடல்கள் கண்டுபிடிக்கப்படாத ஏழு பேரும் அடங்குவர்.

நேபாளத்தில் மிகவும் பிரபலமான அன்னபூர்ணா சுற்றுவழிப்பாதை என்ற இந்த மலையேறும் பாதையில் இருந்து சுமார் 400 மலையேறிகளும் அவர்களது வழிகாட்டிகளும் மீட்கப்பட்டுள்ளனர்.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template