50 பஸ் தரிப்பிடங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை, வன்னி மக்களுக்கு ஒன்றுமில்லை

வடமாகாணத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களில் 50 பஸ் தரிப்பிடங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்தார். 

 வடமாகாணத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களில் பஸ் தரிப்பிடங்கள் இல்லாமையால், மாணவர்களும், முதியவர்கள் போக்குவரத்தை மேற்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இந்த பஸ் தரிப்பிடங்கள் அமைக்கப்படவுள்ளன. 

 இந்த மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெறவுள்ளதுடன், ஒரு தரிப்பிடத்திற்கு 3 இலட்சம் ரூபாய் தொடக்கம் 5 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

 கிராமத்திலுள்ள பிரதான இடங்களில் இந்த பஸ் தரிப்பிடங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

எமக்கு கிடைத்த தகவல்படி வன்னி மாவட்டத்துக்கு ஒரு பேருந்து   தரிப்பிடக் கூட  இது வரை ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template