புனித அல் குர்ஆன் பிரதியைக் கூட விட்டுவைக்காத பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர்!?

ஜம் இய்­யதுல் உலமா சபையின் தலைமை­ய­கத்­துக்கு சென்­றுள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர், கோரிக்கை கடிதம் ஒன்றை சமர்­ப்பித்து புனித அல் ­குர்ஆன் பிரதி, அதன் மொழி­பெ­யர்ப்பு ஆகி­ய­வற்றை பெற்றுச் சென்­றுள்­ளனர். விசா­ர­ணை­யொன்றின் நிமித்­தமே இவ்­வாறு குர் ஆன் பிர­திகள் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் பெற்றுச் செல்­லப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண தெரி­வித்தார்.

இலங்கை முஸ்­லிம்­களின் மத விவ­கா­ரங்கள் தொடர்­பான முடி­வு­களை எடுக்கும் ஜம்இய்­யத்துல் உலமா சபையின் தலை­மை­ய­கத்­திற்கு அண்­மையில் சென்­றி­ருந்த பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவின் அதி­கா­ரிகள் இருவர் குர் ஆன் பிரதி ஒன்­றையும் அதன் மொழிப்­பெ­யர்ப்பு பிர­தி­யொன்­றையும் வழங்­கு­மாறு உலமா சபை­யிடம் கோரிக்கை கடிதம் ஒன்றை சமர்­பித்­துள்­ளனர். இதனை தொடர்ந்து உலமா சபை­யினர் குரான் பிரதி, மொழி­பெ­யர்ப்பு பிரதி ஆகி­ய­வற்றை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு கைய­ளித்­துள்­ளனர். இச்­சம்­பவம் தொடர்­பாக அர­சியல் தலை­மை­க­ளாலும் சமூக மட்­டதில் செயற்­ப­டு­வோ­ராலும் பலத்த சந்­தேகம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அடிப்­ப­டை­வா­தி­களின் தேவை­க­ளுக்­கா­கவே பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவு குர் ஆன் மற்றும் அதன் மொழிப்­பெ­யர்ப்பு பிர­தி­களை கோரு­கி­றது என்ற சந்­தேகம் பர­வ­ல­டிந்து வரும் நிலையில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் குர் ஆன் பிர­திகள் ஏன் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது என்­பது தொடர்பில் கேசரி பொலிஸ் பேச்­சா­ளரை கேட்­டது.

இது தொடர்பில் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன கேச­ரிக்கு இவ்­வாறு பதி­ல­ளித்தார். ‘ ஜம் இய்­யதுல் உலமா சபை குர் ஆனில் உள்ள விட­யங்­க­ளுக்கு மாற்­ற­மாக உள்­ளூரில் செயற்­பட்டு வரு­வ­தாக தெளஹீத் ஜமா அத் என்ற அமிப்­பி­னரால் குற்றச் சாட்டு முன் வைக்­கப்ப்ட்­டுள்­ளது.

ஜம் ஈய்­யதுல் உலமா சபிக்கும் தெளஹீத் ஜமா அத்­துக்கும் இடை­யி­லான இந்த முறுகல் நிலைமை பார­தூ­ர­மாக மாறி பிரச்­சி­னைகள் எத­னையும் ஏற்­ப­டுத்தி விடக் கூடாது என்­பதில் பொலிஸார் அவ­தா­ன­மாக உள்­ளனர். குர் ஆனில் இல்­லாத விட­யங்­களை உலமா சபை செயற்­ப­டுத்­து­வதாக் தெளஹீத் ஜமா அத்தின் குற்றச் சாட்டு தொடர்பில் விசா­ர­ணைகள் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்ப்ட்டு வரு­கின்­றன. அந்த விசா­ர­ணை­களின் தேவைக்­கா­கவே உலமா சபி­யிடம் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் உரிய முறையில் கோரிக்கை விடுத்து குர் ஆன் பிர­தி­களை பெற்­றுள்­ளனர். மாற்­ற­மாக வேறு எந்த கார­ணங்­களும் இதன் பின்­ன­ணியில் இல்லை. அத்­துடன் வேறு நோக்­கங்­களும் இல்லை. பலாத்­கா­ர­மாக குர் ஆன் பிர­திகள் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வு­மில்லை.’ என குறிப்பிட்டார்.

பொலிஸார் குர் ஆன் பிரதிகளை பெற்றுச் சென்றதை உறுதி செய்த ஜம் இய்யதுல் உலமா சபை பொலிஸார் பலாத்காரமாகவோ, தம்மை அவமரியாதை செய்யும் வகையிலோ எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை எனவும் அனைத்தும் முறையாகவே இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template