இன்று (06) காலை 10.50 மணியளவில் ஆற்றில் தவறி விழுந்து மயக்கமுற்ற இளைஞன் கொத்மலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு இலக்கம் 24 சபாபதி வீதியைச் சேர்ந்த என்.விமலேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது சடலம் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் இரசாயன ஆய்வு கூட பரிசோதகராக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment