எனினும் அமெரிக்கா தலைமையிலான வான் தாக்குதலால் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. பலத்த வான் தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கிலும், சிரியாவிலும் தொடர்ந்து முன்னேறியபடியே உள்ளனர். சிரியாவில் துருக்கி எல்லையில் கோபன் என்ற நகரம் உள்ளது. அந்த நகரை கைப்பற்றுவதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்,
அவர்கள் மீது அமெரிக்காவும் மற்ற நாட்டு படைகளும் குண்டு வீசின. ஆனாலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை. தற்போது கோபன் நகரின் பெரும் பகுதியை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஊரை விட்டு வெளியேறி துருக்கி நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். கோபன் நகரில் குர்தீஸ் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த நகரம் தீவிரவாதிகளின் பிடியில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் குர்தீஸ் இன மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இது தொடர்பாக குர்தீஸ் இன தலைவர் ஐசா அப்துல்லா கூறும்போது, அமெரிக்கா வான்வழி தாக்குதல் மட்டும் நடத்துவதால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் தரை வழி தாக்குதலிலும் ஈடுபட்டால் தான் எங்களை காப்பாற்ற முடியும் என்று கூறினார். ஈராக், சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க முயற்சியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினர் முயற்சித்து வருகின்றனர்.
இதனடிப்படையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நிலைகொண்டுள்ள பகுதிகளை இனங்கண்டு வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் அமெரிக்கா தலைமையிலான வான் தாக்குதலால் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. பலத்த வான் தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கிலும், சிரியாவிலும் தொடர்ந்து முன்னேறியபடியே உள்ளனர்.
சிரியாவில் துருக்கி எல்லையில் கோபன் என்ற நகரம் உள்ளது. அந்த நகரை கைப்பற்றுவதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள், அவர்கள் மீது அமெரிக்காவும் மற்ற நாட்டு படைகளும் குண்டு வீசின. ஆனாலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை. தற்போது கோபன் நகரின் பெரும் பகுதியை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஊரை விட்டு வெளியேறி துருக்கி நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். கோபன் நகரில் குர்தீஸ் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த நகரம் தீவிரவாதிகளின் பிடியில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் குர்தீஸ் இன மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இது தொடர்பாக குர்தீஸ் இன தலைவர் ஐசா அப்துல்லா கூறும்போது, அமெரிக்கா வான்வழி தாக்குதல் மட்டும் நடத்துவதால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் தரை வழி தாக்குதலிலும் ஈடுபட்டால் தான் எங்களை காப்பாற்ற முடியும் என்று கூறினார்.







.jpg)
.jpg)

.jpg)






Post a Comment