ஈழ விடுதலை எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த ஆய்வரங்கம் : மே 17 இயக்கம் அழைப்பு!

ஈழ விடுதலை எதிர்கொள்ளும் சர்வதேச சிக்கல்கள் மற்றும் தமிழின இனப்படுகொலைக்கான நீதிக்கு அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து சென்னையில் நாளை நடைபெறவிருக்கும் ஆய்வரங்கத்திற்கு மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழீழ விடுதலை, ஐ.நாவின் மனித உரிமை விசாரணைகள், மேற்குலகம்-ஆசிய நாடுகளின் நிலைப்பாடுகள், சிங்கள அரசின் நகர்வுகள், தெற்காசியாவில் நிகழும் அரசியல் மாற்றங்கள், ஏகாதிபத்திய தலையீடுகள், இனப்படுகொலைக்கான நீதி ஆகியவற்றினைக் குறித்து,

நாளை மாலை 3.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் செ.தெய்வநாயகம் பள்ளியில் நடைபெறவிருக்கும் இந்த ஆய்வரங்கத்தில் பல்வேறு அமைப்பினர் கலந்துக்கொண்டு தங்களது ஆய்வினை முன்வைக்கின்றனர்.

ஈழ விடுதலை குறித்து நடைபெறவிருக்கும் இந்த ஆய்வரங்கத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும் என்று மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template