3 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ், 20 ஆண்டுகள் நீடிக்கும் பேட்டரி

இன்னும் இரண்டு ஆண்டுகளில் செல்போனை 3 நிமிடங்களில் முழுவதும் சார்ஜ் செய்துவிடலாம். அதோடு சுமார் 20 ஆண்டுகளுக்கு பேட்டரியை மாற்ற வேண்டிய தேவையே இருக்காது.

ஆம், இரண்டு நிமிடங்களில் ரீசார்ஜ் செய்வதுடன், இருபது வருடங்கள் ஆயுள் கொண்ட சூப்பர் பேட்டரி தொழில்நுட்பத்தை சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் உருவாகும், ஒரு எலக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுமையாக ஜார்ஜ் செய்ய வெறும் 15 நிமிடங்கள் போதும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை துணைப் பேராசிரியர் சென் ஜியாடாங்கூறுகையில், இது முற்றிலும் புதிய தொழில்நுட்பம் இல்லை. இது, ஏற்கனவே உள்ள லித்தியம் ஐயன் பேட்டரியின் முன்னேற்றம் தான். ஏற்கனவே பயன்படுத்தப்படும் லித்தியம் ஐயன் பேட்டரியில் உள்ள கிராபைட் ஆனோடிற்கு பதிலாக, இதில் விலை மலிவான டைட்டானியம் டையாக்ஸைடு ஜெல்(titanium dioxide gel) பயன்படுத்தப்படுகிறது.

இது தான் நேனோஸ்ட்ரக்சர்ஸாக மாறி இந்த அதிவேக சார்ஜிங்கிற்கு காரணமாகிறது. இந்த சிறிய மாற்றமே இதுவரை பயன்பட்டு வந்த லித்தியம் ஐயன் பேட்டரியின் ஆயுளை 20 ஆண்டுகளாக செய்துள்ளது. இதன் மூலம் சார்ஜ் செய்யும் வேகம் 20 மடங்கு அதிகரித்துள்ளது. நாங்கள் உருவாக்கியுள்ள இந்த பேட்டரி மூலம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனங்கள் பயன்பெறும்.

செல்போன் முதல் மின்சாரத்தில் இயங்கும் கார்கள் வரை, இதனைப் பயன்படுத்த முடியும் என்றார். இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட பேட்டரிகள் இன்னும் இரண்டாடுகளில் விற்பனைக்கு வந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template