உடுப்பிட்டி பகுதியில் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் - 4 போ் படுகாயம்

யாழ். உடுப்பிட்டி பொக்கணைப்பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் நால்வர், ஊறணி வைத்தியசாலையில் புதன்கிழமை(16) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார், வியாழக்கிழமை(16) தெரிவித்தனர்.

உடுப்பிட்டி பொக்கணை பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி பாஸ்கரன்(வயது 48), பாஸ்கரன் வசிகுலம்(வயது 18), பாஸ்கரன் வசீகரன்(வயது 21) மற்றும் தொண்டைமானாறு பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் புஸ்பராசா(வயது 33) ஆகிய நால்வருமே படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வல்வெட்டித்துறை பொலிஸார் மேலும் கூறினர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template