தேக்கு மரக்குற்றிகளை அனுமதிப் பத்திரம் இன்றி கொண்டு சென்றவர்கள் கிளிநொச்சியில் சிக்கினர்

அனுமதிப் பத்திரம் இன்றி தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் கிளிநொச்சி இரனைமடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கிளிநொச்சி முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான தேக்கு மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்கென கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template