மீண்டும் நடிகை அஞ்சலியின் நிர்வாண படம் - மர்ம ஆசாமி கைவரிசை.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய நிர்வாண படம் வெளியானதால் தெலுங்கு நடிகை அஞ்சலி திவேதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது அதே புகைப்படங்கள் வாட்ஸ்அப்புக்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல தெலுங்கு பட நடிகை அஞ்சலி திவேதி மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வந்தார்.

இந்தி படங்களில் நடிக்க விரும்பிய அவர் பட வாய்ப்புக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை வந்தார். சமீபத்தில் யாரோ விஷமிகள் டுவிட்டர் சமூக வலைதளத்தில் நடிகை அஞ்சலி திவேதி பெயரில் போலி கணக்கு தொடங்கி, அதில் நிர்வாண படங்களை வெளியிட்டுள்ளனர். அதில் அஞ்சலி திவேதி நிர்வாணமாக இருப்பது போல 2 படங்கள் இருந்தது.

இந்த படங்களை மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அஞ்சலி திவேதியின் நண்பர் ஒருவர் பார்த்து அவரிடம் தெரிவித்தார். இந்த செய்தியை கேட்டதும் அஞ்சலி திவேதி கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் மால்வாணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார்.

அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த டுவிட்டர் வலைதள கணக்கையும் முடக்கினார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் அவருடைய புகைப்படங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வாட்ஸ்அப்புகளில் அவருடைய புகைப்படங்கள் வேகமாக பகிரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பிரச்சினை முடிந்தது என்று நினைத்த நடிகைக்கு மீண்டும் பிரச்சினை ஆரம்பித்துள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template