குறிகட்டுவானில் இருந்து கொழும்புக்கான போக்குவரத்து சேவை

தீவக மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு குறிகட்டுவானில் இருந்து கொழும்புக்கான போக்குவரத்து சேவை நேற்று முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அனலைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு உள்ளிட்ட தீவகப்பகுதி மக்களுக்கு போக்குவரத்திற்கு இலகுவாக இருக்கும். தற்போது வடபிராந்தியத்திற்கு என 70 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


எனவே தினமும் மாலை 6.30 குறிகட்டுவானில் இருந்து புறப்படும் குறித்த பேருந்து ஊர்காவற்றுறை , யாழ்.பிரதான பேருந்து தரிப்பிடம் ஊடாக குருநாகல் பாதை வழியாக கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை, கல்கிச்சை ஊடாக இரத்மலானையை சென்றடையும். அதேபோல் இரவு 8 மணிக்கு இரத்மலானையில் இருந்து புறப்படும் பேருந்து குறிகட்டுவானை வந்தடையும்.


இதேவேளை, நேற்று சுபநேரத்தில் குறித்த பேருந்திற்கான பணயச்சீட்டினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக் கொண்டதுடன் சேவையினையும் ஆரம்பித்து வைத்தார்.



Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template