மகிந்தவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பொன்சேகா தற்போது தனது நிலைப்பாட்டினை மாற்றி விட்டார் போல இருக்கிறது.
வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவாக ஒரு சில கருத்துக்களை வெளியிட்டு மகிந்த தேர்தலில் போட்டியிட்டால் தான் ஒதுங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு அவர் ஒரு காரணத்தையும் சொல்கிறார்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாராயின், நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டோம். காரணம் மூன்றாவது தடவையாக போட்டியிடுவதற்கு சட்டபூர்வ உரிமையோ அல்லது தார்மீக உரிமையோ அவருக்கில்லை. அது ஒரு சட்டவிரோத தேர்தலாகவே கருதப்படும்.
சில நாட்களுக்கு முன்பாக வரும் தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும் படி தன்னிடம் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளதாகவும் தான் அது பற்றி ஆலோசிப்பதாகவும் தெரிவித்த பொன்சேகா
இப்படி திடீர் மாற்றத்தில் உள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ்சும் இணைந்தால் தேர்தலின் போது ஆட்சி அமைக்க இவர்களின் துணையே சிங்கள அரசியல் கட்சிகளுக்கு தேவைப்படும்.
எனவே சிங்கள அரசியல் வாதிகள் இது தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள் என்பதில் எந்த மாற்றக் கருத்துக்கும் இடமில்லை.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment